Thursday, 10 November 2011

தூங்க பட்டினம் - அதிரைபட்டினம்


தமிழகத்தின் தூங்க நகரகமாக மதுரையை சொல்லுவார்கள் ஏனெனில் சில வணிக
வளாகங்கள், உணவு விடுதிகள் இரவு பகல் பாராமல் இயங்கி கொண்டு
இருக்கும்.சரி மதுரையை சொல்லுறாங்க ஒகே... இஷா தொழுகை முடிந்ததும்
அனைத்து கடையையும் இழுத்து மூடிட்டு போகிற அதிரைபட்டினத்தை அப்படி ஏன் சொல்லுரிங்க என்று உங்களின் பலர் நெஞ்சங்களில் கேள்விகள் வரக்கூடும்,ஆம் அன்பர்களே இன்று  அதிரையில் ஒவ்வொரு மனிதனையும் தூங்கவிடாமல் இருக்கும் இரு குடும்பங்களை பற்றியே எச்சரிக்கை பதிவைத்தான் நாம் பார்க்கபோகிறோம்

ஈனா கொனா,கினா கொனா என்ற இந்த இரு குடும்பங்களால் தவழும் குழந்தைகள் முதல் தள்ளாடும் முதியவர்வரை சொல்லமுடியாத இன்னலுக்கு ஆலக்கபட்டுள்ளர்கள், இவர்கள் யார் ? இவர்களை வளர்ப்பவர்கள் யார்? குறைந்தபட்சம் இவர்களிடம் இருந்து நம்மை காப்பாற்றி கொள்ளுவது எப்படி என்றும்  பார்ப்போம்

பணக்காரன் ஏழை ,படித்தவன் பாமரன் என்று உலகத்தில் வாழும் மனித
குலத்திற்கு அருட்கொடையாக   இறைவனால் வழங்கப்பட்ட தூக்கத்தை மட்டும் அல்ல கொடிய நோய்களை பரப்பும் இந்த ஈடிஸ்,கியுலஸ் என்ற இரண்டுவகை கொசு குடும்பமே நான் ஈனா கொனா,கினா கொனா கொடியவர்கள்,இதில் கியுலஸ் வகை கொசுக்கள் அசுத்த நீர்நிலைகளில் காணபடுகிறது இது கடித்தால் பெரிய பாதிப்பு இருக்காது ஆனால் தொடர்ந்து கடிப்பதால் யானை கால் நோய் வர வாய்ப்புள்ளது,அசுத்த நீர்நிலைகளை அகற்றுவதன் மூலம் இந்த வகையான கொசுக்களை நம்மால் கட்டுபடுத்த முடியும்

ஆனால் மலை காலங்களில் பரவ கூடிய நோய்களான நிமோனியா, சிக்குன்குனிய,டெங்கு போன்ற பல நோயிகளை பரப்பும் ஈடிஸ் வகை கொசுக்கள் நல்ல நீர் நிலைகளிலே உருவாகிறது அதாவது நீர் தேக்க தொட்டி,மலை நீர்கள் தேங்கி கிடக்கும் குளங்கள்,பள்ளங்கள்,பாலிதீன் பைகள்,தேங்கா சிரட்டை,பூதொட்டி, டயர்,டியூப் போன்ற பலவைகைகளில் தேங்கி கிடக்கும் மலை நீர்களில்தான் ஈடிஸ் வகை கொசுக்கள் தங்கள் முட்டைகளை இட்டு (லார்வ) உருவாக்கி  அதன் மூலம் ஒரு கொசு வெறும் நான்கு நாட்களில் பல கொசுக்களை உருவாக்குகிறது

ஆக ஒரு தேங்கா சிரட்டையில் தேங்கி கிடக்கும் மலை நீரால் நூற்று கணக்கான கொசுக்கள் உருவாக வாய்ப்பு இருக்கும் நிலையில் பேருராட்சியால் மட்டும் இந்த கொசுக்களை ஒழித்துவிட முடியாது, ஒவ்வெரு வீட்டினரும் முன்வர வேண்டும் தங்கள் வீட்டின் அருகில் தேங்கி கிடக்கும் நீர்களை அகற்றுவதால் உங்களாலும் நூற்று கணக்கான கொசுக்களை ஒழிக்கமுடியும்.. நீங்க சொல்லுறது சரிங்க கொசு பண்ணைகளான குளங்கள், பள்ளங்களை எங்களால் என்ன செய்ய முடியும்
என்று நீங்கள் கேட்க கூடும் ,நிச்சயமாக பேரூராட்சி முன்வரவேண்டும்
சமிபத்தில் கோவை மாநகராட்சியில் கம்பூசியா என்ற ஒரு வகை மீன்களை ஈடிஸ் கொசுக்களுக்கு எதிராக பயன் படுத்தியுள்ளனர் அதாவது கம்பூசியா மீன்கள் முக்கிய  உணவாக இருப்பது ஈடிஸ் கொசுக்களின் லார்வாக்கல்தான் ஆக இவ்வகை மீன்களை கொள்முதல் செய்து குளங்கள், ஏரிகள் விடப்பட்டுள்ளன அதுமட்டும் இன்றி வீடுகள் தோறும் நீர் தேக்க தொட்டிகளில் வளர்பதற்காக விநியோகிக்கபட்டு வெற்றியும் கண்டுள்ளனர்

சுகாதாரத்திற்கு முன்னுருமை கொடுப்போம் என்று சூளுரைத்த பேரூராட்சி மன்ற உருபினர்களும் தலைவர்களும் நிச்சயம் இந்த கொசுக்களுக்கு சுளுக்கு எடுக்கும் நாள் வெகுதுரம் இல்லை என்ற நம்பிக்கையுடன்

நபி(ஸல்) கூறினார்கள் சுத்தம் ஈமானில் பாதியாகும்-நூல் முஸ்லிம்

Mohamed Rafeek Taj




No comments:

Post a Comment