Tuesday, 1 November 2011

பின்னி பெடல் எடுப்பாரா திரு பிச்தை ???


ஒரு நாட்டில் ஜனநாயகம் வெற்றி பெற வேண்டும் என்றால் சிறந்த எதிர்க்கட்சி அமைய வேண்டும் என்பார்கள் , அவ்வைகையில் நமதூர் பேரூராட்சியில் தமிழகத்தின் ஆளும் கட்சியே எதிர்கட்சியாக அமைந்திருப்பதின் நன்மை / தீமையை அலசுவதே  இப்பதிவின் நோக்கம்

ஆளும்  தரப்பினர் மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கும்  பொழுது அதை  எதிர்க்க வேண்டிய எதிர்கட்சிகள் அதிகார துஸ்பிரயோகம் என்று ஒதுங்குவது வழக்கம் ஆணால் மாநில அரசின் ஆதரவு உள்ள ஆதிமுகவினர் அவ்வாறு ஒதுங்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன் மேலும் முழு திறனுடன் ஆளும்  தரப்பினர் மக்கள் விரோத போக்கை எதிர்க்க முடியும் என்றே நம்புகிறேன் 

இது ஒருபுறம் இருக்க சகோதரர் அஸ்லம் அவர்களின்  வெற்றியால் ஆதிமுக தரப்பின் தேர்தல் வாக்குறுதிகள் அம்பேலாகிவிட்டது என்று நினைக்கும் அதிரை மக்களுக்கு ஒரு நற்செய்தியாக வந்தது திரு பிச்சை அவர்கள்  துணை சேர்மனாக தேர்ந்தேடுக்கபட்டது 

ஏறக்குறைய ஆட்சியின் சமபங்கு  கிடைத்த திரு பிச்சை அவர்கள் செக்கடி மேட்டில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய கட்டாய சூழ்நிலையில் உள்ளார் , அதாவது பாதாள சாக்கடை, பைபர் சாலை, அல் அமீன்    பள்ளிக்கு சுமுக தீர்வு மற்றும் முதல்வர் அறிவித்த இலவச திட்டங்கள்

ஆக ஒருபக்கம் ஆளும் கட்சியினரை கண்காணிக்கும் பொறுப்பு மறுபக்கம் துணை சேர்மன் என்ற வகையில் மக்களுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு என்ற நிலையில் இருக்கும் திரு பிச்சை ஆளும்கட்சியை விட ஒரு படி மேல் உழைக்க வேண்டிய சூழ்நிலையில் சுலபட்டுள்ளர் நம்முடைய  துணை சேர்மன்

இருப்பினும் கிரிகெட் விளையாட்டில் கூட்டுகுழு முயற்சியால் வெற்றி கிடைத்தாலும் BATSMANகே பரிசும் புகழும் கொடுக்கப்படும் அதை இவ்வாறு ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் “WHAT SO EVER CREDIT GOES TO BATSMAN”  அதுபோல் அதிமுகவின் நற்செயல்கள் திமுகவிற்கு சென்றுவிடுமோ என்ற அச்சமும் அதிமுகவிற்கு இருப்பதை அரசியல் வட்டாரங்களில்  பேசபடுகிறது

எது  எப்படியோ  அதிரையில் வளர்ந்துவரும் கட்சியான அதிமுகவை தன் நற்செயல்கள்  முலம் மக்களை கவருவதற்கு பின்னி பெடல் எடுப்பாரா அல்லது அரசியல் கல்புணர்ச்சி காரணங்களால் பின்தங்குவரா என்பதை காலம் நமக்கு  கட்டாயம் காட்டிகொடுக்கும்
Mohamed Rafeek  Taj
http://rattlerafi.blogspot.com/

No comments:

Post a Comment