Friday, 30 December 2011

லோக்பால் RSS /BJP மற்றும் ஆளும்வர்கத்தின் செல்லபில்லையா !?

லோக்பலை பற்றிய என்னுடைய கருத்தை சொல்லுவதற்கு முன் லோக்பால் என்றால் என்ன என்பதை பார்போம்? அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மீது கூறப்படும் ஊழல், பாரபட்சம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஒரு அமைப்புதான், லோக்பால். ஊழலில் ஈடுபடுவோர் மீது, பொதுமக்கள், லோக்பாலிடம் நேரடியாக புகார் அளிக்கலாம். இதன் அடிப்படையில், ஊழல் புகார் கூறப்பட்டவர்கள் மீதான விசராணை, ஒரு ஆண்டுக்குள் முடிக்கப்படும். அடுத்த ஒரு ஆண்டில், வழக்கு விசாரணை முடிவடையும். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட ஊழல் பெருச்சாளி, புகார் கொடுக்கப்பட்ட 2 ஆண்டுகளுக்குள், சிறைக்குள் அனுப்பப்படுவார். லோக்பாலின் அதிகாரங்கள், செயல்பாடுகள் ஆகியவற்றை நிர்ணயிக்கும் சட்டம்தான் லோக்பால் மசோதா சட்டம்.

ஆஹா இது ஒரு அருமையான சட்டம்,இதை எதிர்பவர்கள் தேச துரோஹி,அண்ணா ஹசாரே தேச தந்தையின் மறுவடிவம் என்றெலாம் பாமர இந்தியனை போல நானும் தலையசைத்து ஏற்றுக்கொண்டேன் ஆனால் நேற்று மாநிலங்கள் அவையில் டாக்டர் அபிசேக் மனு சிங்வி பேசிய பிறகுதான் எனக்கு தெரிந்தது ஜன் லோக்பால் என்று உருவாக்கப்பட்ட அதாவது டீம் அண்ணா மற்றும் சங்பரிவார் கூட்டுசதியால் உருவாக்கப்பட்ட ஜன் லோக்பால் முலம் இந்திய நாட்டின் பீடைகளான உயர்சாதியினர் கொல்லைபுரமாக அதாவது ஜன் லோக்பால் என்ற ஆயுதத்தை வைத்து கொண்டு இந்த நாட்டை மறைமுகமாக ஆழ முன்வந்து இருப்பது

பிஜேபி சேர்ந்த அருண்ஜெட்லியின் வாதத்திற்கு மறுவாதத்தின் பொது டாக்டர் சிங்வி இவ்வாறு சொன்னார் லோக்பால் வரம்பிற்குள் சிபிஐ,சிவிஜி,குடிமக்கள் சாசனம் எல்லவற்றையும் லோக்பால் கிழ் கொண்டுவரவேண்டும் அத்துடன் விசாரணை,புலனாய்வு,குற்றஞ்சாட்டுதல்/வழக்குத் தொடர்தல் என்று அனைத்தும் வரவேண்டும் கடவுளுக்கு நன்றி பிஜேபி திர்ப்பும் லோக்பலே சொல்லவேண்டும் என்று சொல்லவில்லை என்றார் மேலும் அவர் பேசுகையில் பிரதமர் அலுவலகம்  லோக்பலுக்கு முன் அதாவது மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட தலைவர் அலுவலகம் மிகவும் சிறிய பிராணியை போல் இருக்கும் என்றார்

டீம் அண்ணா மற்றும் சங்க்பரிவாரர்களால் முழங்கப்படும் ஜன் லோக்பால் நிரவேற்றபட்டால் தேர்ந்து எடுக்கப்படும் லோக்பால் எட்டு தலைவர்கள் இந்த நாட்டை மறைமுகமாக ஆட்சி செய்வார்கள் (அதிகாரவர்கத்தில் புல்லுருவி பூனல்களை  தவிர வேறு யார் இருக்கிறார்கள் தேர்ந்து எடுக்க படுவதற்கு) இதுதான் இவர்களின் சதித்திட்டம் என்பதை டாக்டர் சிங்வி அவர்களின் பேச்சால் என்னால் மட்டும் அல்ல ஏனைய நடுநிலை இந்தியர்களாலும் இந்த சதித்திட்டம் உணரப்பட்டது

ஆதரிப்பவர்கள் சொல்லலாம் அதுதான் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கிடு வழங்கப்பட்டுள்ளதே என்று, அந்த பொய்யை தவளை தன் வாயால் கெடுவது போல் டாக்டர் சிங்வி போட்டு உடைத்தார் நாங்கள் ரேசெர்வேசன் கொண்டு வரவில்லை ரெபெர்செண்டசன் தான் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அதாவது சிறுபான்மையினர் கட்டாயம் இருக்கவேண்டும் என்று எந்த ஒரு சரத்தும் சொல்லவில்லை என்றார்,அதனால் தான்  நாராயனஸ்வமியின் அறிக்கையை லல்லுவின் எம்பி சபையில் கிழத்தாரோ என்னோவோ,வெறும் நான்கு எம்பி வைத்திருக்கும் லல்லுவை லோக்பலுக்கு எதிரான சதிகாரர் என்று மிடியாக்கள் சொல்லுவது நகைப்புக்குரியது

இறுதியாக அராஜக (Anarchy) லோக்பாலை தவிர்த்து மக்கள் ஆட்சிக்கு உட்பட்ட லோக்பால் உருவாக்கப்படவேண்டும்,லோகயுக்தவை பற்றி டீம் அண்ணா  பேச முன்வரவேண்டும்

Friday, 23 December 2011

நீங்கள் உலகில் எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் சரி உங்களுக்கும் இந்த எச்சரிக்கை !!!


எச்சரிக்கை செய்யபட்டது அவனுக்கு அலச்சியபடுதினான் !
உறுதி செய்யபட்ட உண்மை என்று சொல்லபட்டது அவனுக்கு அலச்சியபடுத்தினான்!
நிழல் போல தொடர்ந்து வரும் என்று சொல்லபட்டது அவனுக்கு அலச்சியபடுத்தினான்!

திரைப்படம் பார்த்துவிட்டு இறைபள்ளியை கடந்து சென்ற பொழுது அவன் முன் தோன்றியது அது உள்ளம் படபடக்க,குருதி கொந்தளிக்க பரிதபதக்குரிய அவன் வினவினான் நீ யார் ?

உண் நிழல் போல் தொடர்ந்து வந்த நான் இன்று உன் முன் நிற்பதற்காக உத்தரவு பிரபிக்கபட்டுள்ளது நான்தான் உன்னுடைய மரணம் ! என்று சொன்னவுடன்
இறுதி முச்சு இழுபதற்கு முன் எதிரே தோன்றிய இறை பள்ளியின்
நுழைவாயில் எழுதப்பட்ட ஒரு வாசகத்தை கண்டான்.....

உங்களுக்காக தொழுகை வைப்பதற்கு முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்....
islam

நன்றி :சகோ டைரி 

தேடிவச்சவனுக்கு லாபம் தேவை உள்ளவனுக்கு சாபம்- தங்கம் என் பார்வையில்

நிமிடத்துக்கு நிமிடம் மாறுவது  பச்சோந்தி என்பது  பழமொழியில் ஒன்று ,அப்போ புதுமொழி  என்னனு கேட்டா வேற என்னத்த சொல்லுறது  தங்கம்தான்  "தேடிவச்சவனுக்கு லாபம் தேவை உள்ளவனுக்கு சாபம்" என்று சொல்லும் அளவுக்கு நம்மை ஆட்டிவைகிறது தாறுமாறாக ஏறும் தங்கத்தின்  விலை.

இன்பத்தையும் துன்பத்தையும் தரும் குழந்தைகளை சிலர் இதனால்தான் என் தங்கமே என்று கொஞ்சுகிரர்களோ என்னோவோ சிலர் மனைவிகளையும் அப்படி அழைப்பதுண்டு !ஆக மனிதர்களில் ஒருசாராருக்கு இன்பத்தையும் மற்றவர்களுக்கு துன்பத்தையும் தரும் தங்கம் ஏன் இப்படி விலை ஏறுகிறது, தங்கத்தின் வகை என்ன ,ஆதி மனிதன் எப்படி தங்கத்தின் தரத்தை பிரித்து எடுத்தான் என்ற பல கேள்விகளின்  என் தேடலின் முடிவே இப்பதிவு

1920-ஆம் அண்டு ஒரு பவுன் தங்கத்தின் விலை வெறும் 21-ருபாய் தான் இதே ஒரு பவுன் தங்கம் 2008-ல் 10,000-ரூபாய்க்கு விற்றது. 2011-ல் 21,000-ரூபாய்க்கு விற்கிறது இந்த அளவிற்கு தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரிக்க காரணம் என்ன என்று பொருளாதார நிபுணர்களிடம் கேட்டால் அவர்கள் கூறும் காரணமோ, உற்பத்தி அளவை காட்டிலும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பயன்பாடு அல்லது தேவை, அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி, மற்றும் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி என்பார்கள் இப்படி பொதுவான காரணங்கள் பல இருந்தாலும் இவற்றை விட முக்கியமான காரணமாக இருப்பது முன் பேரம் ஆகும். அதாவது முன் பேரத்தின் அடிப்படையில் தங்கத்தில் முதலீடு செய்வது இப்போது அதிகரித்துவிட்டது. இதனடிப்படையில் முதலீடு செய்பவர்கள் தங்கத்திற்கு முழுப்பணத்தையும் கொடுத்து வாங்காமல் குறைந்த பணத்தை முதலீடு செய்து சூதாட்டம் போல் தங்கத்தை வாங்கி விற்பதால் தங்கத்தின் விலை நிமிடத்திற்கு நிமிடம் உயர்கிறது.gold

மிக தூய்மையான தங்கத்தை ஒன்றும் செய்ய இயலாது, தங்கத்துடன் செம்பு சேர்த்துதான் ஆபரணம் செய்கிறார்கள். தூய தங்கம் 100 டச் ஆகும், 24 காரட் தங்கம் என்பது 99.999 டச் ஆகும். 22 காரட் என்பது 88-லிருந்து 90-டச் வரை இருக்கும். 916 தங்கம் என்றால் அது 91.6 டச் அளவு தூய்மையான தங்கம் ஆகும் 22 காரட்டில் கிடைக்கும் அதிகபசட்ச தூய தங்கம் அதுதான்.

கே.டி.எம் என்ற முத்திரை பற்றியும் நாம் கேள்விபட்டிருப்போம். K.D.M என்பது தங்கத்தை நகையாக வார்க்கும் போது செம்புக்கு மாற்றாக பயன்படுத்தபடும் ஒருவகை பொடியை குறிக்கிறது. இந்த 'கே.டி.எம்' பொடியை பயன்படுத்தி நகையை வார்க்கும்போது, அதன் பெரும் பகுதி காற்றில் கரைந்து விடுவதால், அது நகையுடன் குறைந்த அளவே கலக்கும்; அதனால் ஒரு நகையில் தங்கத்தின் சதவிகிதம் அதிக அளவு இருக்கும் என்பதுதான் இதன் சிறப்பு. '22 கேரட்', 'கே.டி.எம்' போன்ற குறியீட்டு வார்த்தைகளை, நகை தயாரிக்கும் யாரும் பொறித்து விடமுடியும் என்பதால் அந்த தங்கம் தூய்மையானது என்று கூறிவிட முடியாது. ஆனால் ‘ஹால்மார்க்' முத்திரையை நகை தயாரிப்பவர்களோ, அந்நியர்களோ பொறித்துவிட முடியாது. 'ஹால்மார்க்' என்பது அரசு நிறுவனம் தரும் முத்திரை என்பதால், அந்த முத்திரையுள்ள நகைகள் பொதுவாக நம்பிக்கைக்கு உரியவை என்று சொல்லப்படுகிறது.எது எப்படியோ காசு கையில் இருந்தால் ஒன்னு பொன்னுல போடு அல்லது மண்ணுல போடுன்னு சொன்னவங்க வாயில சீனியைத்தான் போடணும்

தங்கத்தை போல மதிப்பு மிக்க உலோகம் உள்ளதா என்றால் அனைவரின் நினைவிலும் வரும் ஒரே ஒரு உலோகம் பிளாட்டினம் தான். அதையும் தாண்டி இன்னொரு உலோகமும் உள்ளது,அது என்னனு உங்களின் யாரவது சொன்னால் நிச்சயம் தபுறுக் இருக்கிறது,ஆம் அன்பர்களே நான் சொல்லும் இடத்திற்கு அதிரையில் காலை எழு மணிக்கு வந்தால் கை நிறைய தபுறுக்  கிடைக்கும்,ஒரு சின்ன க்குளு கொடுக்கிறேன் அந்த இடம் தக்கவ பள்ளி அருகே உள்ளது .....

Mohamed Rafeek Taj