Saturday, 19 November 2011

அப்துல் கலாமை அமெரிக்கர்கள் மட்டும் அவமானம் படுத்தினார்களா ?

கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்க சென்ற முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாம் அவமானம் படுத்த பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த்ததை அடுத்து உயர்மட்ட அளவிலான பிரச்சனையாக எழுப்பும் மாறு வெளியுறவு துறை அமைச்சர் அமெரிக்காவுக்கான இந்திய தூதரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்

அமெரிக்க சட்டம் இதில் என்ன சொல்லுகிறது என்பதை பார்ப்போம்
, ட்வின் டவேர் தாக்குதலுக்கு பிறகு பிரத்தியோகமாக உருவாக்கப்பட்ட விமானத்துக்கான பாதுகாப்பு சட்டத்தில் அமெரிக்காவுக்கு வரக்கூடிய பயணிகள் விமானத்தில் பயணம் செய்யும் அனைவருக்கும் பயணிகள் சோதனையில் இருந்து எந்த விளக்கும் அளிக்க கூடாது,அந்த வகையில் முன்னால் ஜனாதிபதி வேட்பாளர் ஜான் கேரி ,முன்னால் பாதுகாப்பு துறை அமைச்சர் ரம்ஸ் பெல்ட்,உலகவங்கி பிரசிடன்ட் போன்றவர் எல்லாம் சாதாரண பயணிகளை போல் சோதனை செய்ததை நானே நேரில் பார்த்துள்ளேன் (அதாவது சூ ,பெல்ட் ,வல்லெட் போன்ற உடமைகளை சோதிக்கும் பொழுது )
 
ஆனால் இந்த அளவுக்கு விவகாரம் பெரிதாக போவதற்கு காரணம் சோதனை முடித்த பின் விமானத்தில் அமர்ந்து இருந்த அப்துல் கலாமை மிண்டும் சோதனைக்கு உட்படுத்தியது,இது வேண்டுமென்றே திட்டமிட்டு அவமானம் படுத்த வேண்டும் என்ற செயல் என்றே இந்திய அரசும் மக்களும் நினைகின்றனர்,இப்பொழுது மன்னிப்பு கேட்டு விட்டாலும் இத்துடன் இதுபோன்ற செயல்களை அவர்கள் நிறுத்த போவது இல்லை                 
சரி இதற்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்க தோனுகிறத ,ஆம் அன்பர்களே அப்துல் கலாம் அவமானபடுத்தியது  அமெரிக்கர்கள் மட்டும் அல்ல இந்தியாவில் தன்னைதானே இவர் அவமனபடுத்திகொண்ட காட்சியை நிங்களே பாருங்கள்,காவிகளின் காலடியில் கிடக்கும் இந்த காட்சியை பாருங்கள்,பாமர இஸ்லாமியர் செய்யாத காரியத்தை கூட இந்த படித்த இஸ்லாமியர் செய்யும் காட்சியை பாருங்கள்

இதுபோன்ற சுவாமிஜிகளை தலையில் துக்கி வைத்து ஆடும் பார்ப்பனர்கள் கூட சரிக்கு சமாக அமர்ந்து  இருப்பதையும் பாருங்கள்  

  
அப்துல் கலாமை அமெரிக்கர்கள் அவமனபடுத்திவிட்டர்கள் என்று ஒரு இந்தியனாக இன்று வருந்தினேன்
தன்னை தானே அவமானம் படுத்தி கொண்ட அப்துல் கலாமை பார்த்து ஒரு இஸ்லாமியனாக அன்று வருந்தினேன்

Mohamed Rafeek Taj

Thursday, 10 November 2011

தூங்க பட்டினம் - அதிரைபட்டினம்


தமிழகத்தின் தூங்க நகரகமாக மதுரையை சொல்லுவார்கள் ஏனெனில் சில வணிக
வளாகங்கள், உணவு விடுதிகள் இரவு பகல் பாராமல் இயங்கி கொண்டு
இருக்கும்.சரி மதுரையை சொல்லுறாங்க ஒகே... இஷா தொழுகை முடிந்ததும்
அனைத்து கடையையும் இழுத்து மூடிட்டு போகிற அதிரைபட்டினத்தை அப்படி ஏன் சொல்லுரிங்க என்று உங்களின் பலர் நெஞ்சங்களில் கேள்விகள் வரக்கூடும்,ஆம் அன்பர்களே இன்று  அதிரையில் ஒவ்வொரு மனிதனையும் தூங்கவிடாமல் இருக்கும் இரு குடும்பங்களை பற்றியே எச்சரிக்கை பதிவைத்தான் நாம் பார்க்கபோகிறோம்

ஈனா கொனா,கினா கொனா என்ற இந்த இரு குடும்பங்களால் தவழும் குழந்தைகள் முதல் தள்ளாடும் முதியவர்வரை சொல்லமுடியாத இன்னலுக்கு ஆலக்கபட்டுள்ளர்கள், இவர்கள் யார் ? இவர்களை வளர்ப்பவர்கள் யார்? குறைந்தபட்சம் இவர்களிடம் இருந்து நம்மை காப்பாற்றி கொள்ளுவது எப்படி என்றும்  பார்ப்போம்

பணக்காரன் ஏழை ,படித்தவன் பாமரன் என்று உலகத்தில் வாழும் மனித
குலத்திற்கு அருட்கொடையாக   இறைவனால் வழங்கப்பட்ட தூக்கத்தை மட்டும் அல்ல கொடிய நோய்களை பரப்பும் இந்த ஈடிஸ்,கியுலஸ் என்ற இரண்டுவகை கொசு குடும்பமே நான் ஈனா கொனா,கினா கொனா கொடியவர்கள்,இதில் கியுலஸ் வகை கொசுக்கள் அசுத்த நீர்நிலைகளில் காணபடுகிறது இது கடித்தால் பெரிய பாதிப்பு இருக்காது ஆனால் தொடர்ந்து கடிப்பதால் யானை கால் நோய் வர வாய்ப்புள்ளது,அசுத்த நீர்நிலைகளை அகற்றுவதன் மூலம் இந்த வகையான கொசுக்களை நம்மால் கட்டுபடுத்த முடியும்

ஆனால் மலை காலங்களில் பரவ கூடிய நோய்களான நிமோனியா, சிக்குன்குனிய,டெங்கு போன்ற பல நோயிகளை பரப்பும் ஈடிஸ் வகை கொசுக்கள் நல்ல நீர் நிலைகளிலே உருவாகிறது அதாவது நீர் தேக்க தொட்டி,மலை நீர்கள் தேங்கி கிடக்கும் குளங்கள்,பள்ளங்கள்,பாலிதீன் பைகள்,தேங்கா சிரட்டை,பூதொட்டி, டயர்,டியூப் போன்ற பலவைகைகளில் தேங்கி கிடக்கும் மலை நீர்களில்தான் ஈடிஸ் வகை கொசுக்கள் தங்கள் முட்டைகளை இட்டு (லார்வ) உருவாக்கி  அதன் மூலம் ஒரு கொசு வெறும் நான்கு நாட்களில் பல கொசுக்களை உருவாக்குகிறது

ஆக ஒரு தேங்கா சிரட்டையில் தேங்கி கிடக்கும் மலை நீரால் நூற்று கணக்கான கொசுக்கள் உருவாக வாய்ப்பு இருக்கும் நிலையில் பேருராட்சியால் மட்டும் இந்த கொசுக்களை ஒழித்துவிட முடியாது, ஒவ்வெரு வீட்டினரும் முன்வர வேண்டும் தங்கள் வீட்டின் அருகில் தேங்கி கிடக்கும் நீர்களை அகற்றுவதால் உங்களாலும் நூற்று கணக்கான கொசுக்களை ஒழிக்கமுடியும்.. நீங்க சொல்லுறது சரிங்க கொசு பண்ணைகளான குளங்கள், பள்ளங்களை எங்களால் என்ன செய்ய முடியும்
என்று நீங்கள் கேட்க கூடும் ,நிச்சயமாக பேரூராட்சி முன்வரவேண்டும்
சமிபத்தில் கோவை மாநகராட்சியில் கம்பூசியா என்ற ஒரு வகை மீன்களை ஈடிஸ் கொசுக்களுக்கு எதிராக பயன் படுத்தியுள்ளனர் அதாவது கம்பூசியா மீன்கள் முக்கிய  உணவாக இருப்பது ஈடிஸ் கொசுக்களின் லார்வாக்கல்தான் ஆக இவ்வகை மீன்களை கொள்முதல் செய்து குளங்கள், ஏரிகள் விடப்பட்டுள்ளன அதுமட்டும் இன்றி வீடுகள் தோறும் நீர் தேக்க தொட்டிகளில் வளர்பதற்காக விநியோகிக்கபட்டு வெற்றியும் கண்டுள்ளனர்

சுகாதாரத்திற்கு முன்னுருமை கொடுப்போம் என்று சூளுரைத்த பேரூராட்சி மன்ற உருபினர்களும் தலைவர்களும் நிச்சயம் இந்த கொசுக்களுக்கு சுளுக்கு எடுக்கும் நாள் வெகுதுரம் இல்லை என்ற நம்பிக்கையுடன்

நபி(ஸல்) கூறினார்கள் சுத்தம் ஈமானில் பாதியாகும்-நூல் முஸ்லிம்

Mohamed Rafeek Taj




Tuesday, 1 November 2011

பின்னி பெடல் எடுப்பாரா திரு பிச்தை ???


ஒரு நாட்டில் ஜனநாயகம் வெற்றி பெற வேண்டும் என்றால் சிறந்த எதிர்க்கட்சி அமைய வேண்டும் என்பார்கள் , அவ்வைகையில் நமதூர் பேரூராட்சியில் தமிழகத்தின் ஆளும் கட்சியே எதிர்கட்சியாக அமைந்திருப்பதின் நன்மை / தீமையை அலசுவதே  இப்பதிவின் நோக்கம்

ஆளும்  தரப்பினர் மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கும்  பொழுது அதை  எதிர்க்க வேண்டிய எதிர்கட்சிகள் அதிகார துஸ்பிரயோகம் என்று ஒதுங்குவது வழக்கம் ஆணால் மாநில அரசின் ஆதரவு உள்ள ஆதிமுகவினர் அவ்வாறு ஒதுங்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன் மேலும் முழு திறனுடன் ஆளும்  தரப்பினர் மக்கள் விரோத போக்கை எதிர்க்க முடியும் என்றே நம்புகிறேன் 

இது ஒருபுறம் இருக்க சகோதரர் அஸ்லம் அவர்களின்  வெற்றியால் ஆதிமுக தரப்பின் தேர்தல் வாக்குறுதிகள் அம்பேலாகிவிட்டது என்று நினைக்கும் அதிரை மக்களுக்கு ஒரு நற்செய்தியாக வந்தது திரு பிச்சை அவர்கள்  துணை சேர்மனாக தேர்ந்தேடுக்கபட்டது 

ஏறக்குறைய ஆட்சியின் சமபங்கு  கிடைத்த திரு பிச்சை அவர்கள் செக்கடி மேட்டில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய கட்டாய சூழ்நிலையில் உள்ளார் , அதாவது பாதாள சாக்கடை, பைபர் சாலை, அல் அமீன்    பள்ளிக்கு சுமுக தீர்வு மற்றும் முதல்வர் அறிவித்த இலவச திட்டங்கள்

ஆக ஒருபக்கம் ஆளும் கட்சியினரை கண்காணிக்கும் பொறுப்பு மறுபக்கம் துணை சேர்மன் என்ற வகையில் மக்களுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு என்ற நிலையில் இருக்கும் திரு பிச்சை ஆளும்கட்சியை விட ஒரு படி மேல் உழைக்க வேண்டிய சூழ்நிலையில் சுலபட்டுள்ளர் நம்முடைய  துணை சேர்மன்

இருப்பினும் கிரிகெட் விளையாட்டில் கூட்டுகுழு முயற்சியால் வெற்றி கிடைத்தாலும் BATSMANகே பரிசும் புகழும் கொடுக்கப்படும் அதை இவ்வாறு ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் “WHAT SO EVER CREDIT GOES TO BATSMAN”  அதுபோல் அதிமுகவின் நற்செயல்கள் திமுகவிற்கு சென்றுவிடுமோ என்ற அச்சமும் அதிமுகவிற்கு இருப்பதை அரசியல் வட்டாரங்களில்  பேசபடுகிறது

எது  எப்படியோ  அதிரையில் வளர்ந்துவரும் கட்சியான அதிமுகவை தன் நற்செயல்கள்  முலம் மக்களை கவருவதற்கு பின்னி பெடல் எடுப்பாரா அல்லது அரசியல் கல்புணர்ச்சி காரணங்களால் பின்தங்குவரா என்பதை காலம் நமக்கு  கட்டாயம் காட்டிகொடுக்கும்
Mohamed Rafeek  Taj
http://rattlerafi.blogspot.com/