Sunday, 23 September 2012

சவூதி மானம் காத்த மன்னர் அப்துல்லாஹ் ...

இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படத்தின் திரைக்கு பின்னால்  இஸ்ரேலின் (மொசாத்) தீவிரவாத அமைப்பின் தொடபு வெளிப்பட்டுள்ளது "இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா" என்பது போல் மொசாத் மிண்டும் இஸ்லாமியர்களுக்கு எதிரான சதிவலையை பின்னியுள்ளது ,  இத்திரைப்படத்தை தயாரித்த  பசிலி .கலிஃபோர்னியாவில் வசிக்கும் இஸ்ரேல் வம்சாவழியைச் சார்ந்தவன் ,கிறிஸ்தவ-யூத அமைப்புகளின் உதவியுடன் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் முன்னர் செய்திகள் வெளிவந்தன.

இஸ்லாம் ஓர் புற்றுநோய் என்றும், முஹம்மது நபியை மோசமாக சித்தரித்தும் பசிலி ஊடகங்களுக்கு பேட்டியளித்ததாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் பசிலி என்பவன் போலி என்றும், இது ஒரு போலியான தகவல் என்றும் கூறி இத்திரைப்படத்தின் கன்ஸல்டண்ட் என கூறும் ஸ்டீவ் க்ளீன் என்பவர் AFP செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

பசிலி தலைமறைவாகிவிட்டதாக முன்னர் செய்திகள் வெளியாகின.ஆனால், இது தொடர்பாக எ.எஃப்.பி செய்தியாளர்கள் நடத்திய விசாரணையில் பசிலி என்பவர் கலிஃபோர்னியாவைச் சார்ந்த காப்டிக் கிறிஸ்தவர் என்பது தெரியவந்துள்ளது. நகவ்லா பசிலி நகவ்லா என்ற 55 வயதான நபருக்கு, பசிலியைக் குறித்து முதலில் வெளியான தகவல்களுக்கும் பொருத்தம் இருப்பதாக எ.எஃப்.பி கூறுகிறது. ஆனால், பசிலி என்ற பெயரில் தான் தன்னை அறிமுகப்படுத்தவில்லை என்று நகவ்லா கூறுகிறான்.

  ‘innocence muslims’ என்ற திரைப்படம் 2 மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் வெளியானது. ஆனால், எகிப்தில் ஒரு காப்டிக் கிறிஸ்தவ விஷமி ஒருவன், இத்திரைப்படத்தின் முக்கிய காட்சிகள் அடங்கிய 13 நிமிடங்கள் ஓடும் வீடியோவை அரபு மொழியில் மொழிமாற்றம் செய்து யூ ட்யூபில் பதிவு ஏற்ற்றம் செய்துள்ளான். இதனைத்தொடர்ந்து எகிப்து, லிபியா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் பெரும் கொந்தளிப்பு அடைந்தனர். தொடர்ந்து அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டன. யூத லாபிதான் இத்திரைப்படத்தின் பின்னணியில் செயல்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இத்திரைப்படம் ஒரு சதித்திட்டம் என்று முஸ்லிம் அறிஞர்கள் கூறுகின்றனர் ,இஸ்ரேல் நினைத்து செய்தது தற்போது நடந்துள்ளது. உலகம் முழுவதும் இஸ்ரேலின் (மொசாத்) தீவிரவாத அமைப்பு அனைத்து காரியங்களும் செய்து கொண்டு வருகிறது என்பதை வரும் நாட்களில் உலகம் அறியும்.

இதற்கிடையில்  மன்னர் அப்துல்லாஹ் இவ்விவகரத்திலும் காலம் தாழ்த்தி மவுனம் கலைத்துள்ளார்,இந்த திரைப்படத்தை அகற்றுமாறு சவூதி மன்னர் அப்துல்லா கூகிள் நிறுவனத்திடம் கோரியுள்ளார். கூகிள் அதனை செய்ய தவறினால் யூடியுப் இணையத்தளம் சவூதியில் முழுமையாக முடக்கப்படும் என சவூதியின் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது,ஆட்சி அதிகரபிடத்தில் அமர்ந்திருக்கும் மற்ற இஸ்லாமிய ஆட்சியாளர்களின் ஆழ்ந்த தூக்கம்  மன்னர் அப்துல்லாவின் கோரிக்கை தட்டி எழுப்பும் என்று நம்பபடுகிறது